கடத்தப்பட்ட கல்முனை தாய் (29 வய­து) ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு.

கடத்தப்பட்ட கல்முனை தாய் (29 வய­து) ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு.

கல்­முனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் கடந்த 08ஆம் திகதி கடத்­தப்­பட்ட 29 வய­தான இரண்டு பிள்­ளை­களின் தாய், ஒரு வாரத்தின் பின்னர் யாழ்ப்­பாணம் கோப்பாய் பகு­தியில் நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் பெண்னை கடத்­திய முன்னாள் கண­வரை கைது செய்­துள்­ள­தாக கல்­முனைப் பொலிஸார் தெரி­வித்­தனர்.குறித்த தாய் கண­வ­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெற்று பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்­து­ வரும் நிலை­யி­லேயேகடந்த 08ஆம் திகதி கடத்­தப்­பட்­ட­தாக செய்­யப்­பட்ட முறைப்­பாட்டின் அடிப்­ப­டையில் சந்­தே­க­ந­பர்கள் இரு­வரைக் பொலிஸார் கைது­ செய்து கல்­முனை நீத­வான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தினர் .இத­னை­ய­டுத்து நீதி­மன்­றத்தின் உத்­த­ரவின் பேரில் சந்­தே­க­ந­பர்கள் இரு­வ­ரையும் 10ஆம் திகதி அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­திய போது இரு­வரும் சாட்­சி­களால் அடை­யாளம் காட்­டப்­பட்­டனர்.அத­னை­ய­டுத்து, சந்­தே­க­நபர்கள் இரு­வ­ரையும் இம்­மாதம் 25 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதவான் பயாஸ் றஸாக் உத்­த­ர­விட்டார்.இந்தக் கடத்­த­லுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் பெண்ணின் முன்னாள் கண­வரும் தேடப்­பட்டு வந்த நிலையில், பொலி­ஸா­ருக்கு கிடைத்த இரக­சிய தக­வ­லை­ய­டுத்து, கல்­முனை பொலிஸார் யாழ்ப்­பா­ணத்­துக்கு சென்று அங்கு கடத்­தப்­பட்ட பெண், அவ­ரது முன்னாள் கண­வ­ருடன் யாழ்ப்­பாணம் கோப்பாய் பகு­தி­யி­லுள்ள வீடொன்­றிலில் இருந்த நிலையில் மீட்­கப்­பட்­ட­துடன் முன்னாள் கணவன் கைது­ செய்­யப்­பட்டார்.குறித்த பெண், வைத்­திய பரி­சோ­த­னைக்­காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்இதனை நண்பர்களுடன் பகிரவும்.


RELATED POSTS

0 comments: